பாஜக குரலில் பேசும் ஜிகே வாசன்: ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே இருக்கு! மறுபடியும் ஒரே.. ஒரே.. மந்திரம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்று பாஜக தொடர்ந்து ஒரே ஒரே என்று சர்வாதிகார நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று என்று பல்வேறு கட்சியினரும் கூறிவரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இதை ஆதரித்து வருகின்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம்‌ மற்றும்‌ சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில்‌ தேர்தல்‌ நடக்கும்‌ போது பொதுச்‌ செலவினங்கள்‌ குறையும்‌, சேமிப்பு கூடும்‌, மற்றும்‌ நாட்டின்‌ பாதுகாப்பு படைகளை உகந்த முறையில்‌ பயன்படுத்த இத்திட்டம்‌ பயனளிக்கும்‌ என்று பாஜக கூறிவருவதை ஜிகே வாசன் வழிமொழிந்துள்ளார்.

உசிலம்பட்டியில் அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து பணம் நகை கொள்ளை

நமது தேசம்‌ எப்பொழுதும்‌ தேர்தல்‌ நினைவிலேயே உள்ளது. மேலும்‌ ஏதாவது ஒரு மாறிலத்தில்‌ எல்லா நேரங்களிலும்‌ மாறி, மாறி தேர்தல்‌ நடைபெற்றுக்‌ கொண்டு இருக்கிறது. இது நிர்வாகத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. மேலும்‌ மத்திய மற்றும்‌ மாநில நலன்களின்‌ திட்டமிடலை தாமதப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா சுதந்திர பெற்று 77ஆம்‌ ஆண்டில்‌ அடியெடுத்து வைக்கும்‌ இந்த வேலையில்‌, இந்தியாவை வருகிற 2047ஆம்‌ ஆண்டிற்குள்‌ வளர்ந்த நாடாக மாற்றுவதை பாரதப்‌ பிரதமர்‌ தனது பணியாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்த நிலையில்‌ நாம்‌ அனைவரும்‌ தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நிர்வாகத்தில்‌, நீண்ட கால திட்டத்தில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளும்‌ கட்சியும்‌, எதிர்க்‌ கட்சிகளும்‌, மக்களின்‌ நலன்களில்‌ மட்டுமே கவனம்‌ செலுத்தி, நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்ல ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவை என்று கூறியுள்ள ஜிகே வாசன் இத்திட்டத்தால்‌ அனைத்து கட்சிகளும்‌, நாட்டின்‌ வளர்ச்சியில்‌ முழு கவனம்‌ செலுத்த முடியும்‌ என்கிறார்.

இந்த விவகாரத்தில்‌ அனைத்து கட்சிகளுடன்‌ ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த முயற்சியை தமிழ்‌ மாநில காங்கிரஸ்‌ முழு மனதுடன்‌ வரவேற்கிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.