அவர் பொய் சொல்றாருங்க.. திமுக அந்த விஷயத்தில் மோசம்- உதயநிதி பக்கம் திரும்பிய கஸ்தூரி!

உதயநிதி ஸ்டாலின்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பாஜகவினர் கொந்தளித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 ரூபாய் சீப்பு

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் உதயநிதியின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தினார். மேலும் அவரது தலையை கொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார். இதனை நக்கலடித்த உதயநிதி ஸ்டாலின், தன் தலையை சீவ ஒரு கோடி ரூபாய் ஏன் 10 ரூபாய் சீப்பு இருந்தாலே போதும் என்று கூறியிருந்தார்.

கடுப்பான சாமியார்

இதனால் கடுப்பான சாமியார் சன்மான தொகையை 10 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறதா? நடிகை கஸ்தூரி பேட்டி!
உதயநிதி பிடிவாதம்

இந்நிலையில் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என பிடிவாதமாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தில் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல கட்டுப்பாடுகளை விதித்து அடிமையாக்கி வைத்திருந்தனர் என்றார்.

என்ன அக்கறை…

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சையும் கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இதுககுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், ‘என்ன அக்கறை என்ன அக்கறை. பெண்ணை இழிவுபடுத்துவதில் திமுக காரர்களுக்கு நிகர் உண்டா? அதை முதலில் ஒழிங்க வரலாற்றில் பெண்ணை

அடிமைப்படுத்திய மதம் எதுன்னு போட்டி வைத்தால் இந்து மதம் எவ்வளவோ பரவாயில்லை என்று தெரியும். அப்போ மற்ற மதத்தை ஒழிப்பேன் என்பாரா? பொய் சொல்பவர்’ என பதிவிட்டுள்ளார்.

விளாசும் கஸ்தூரி

ஏற்கனவே டெங்கு மலேரியா போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே… அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? என கேட்டிருந்தார். மேலும் சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க என்றும் பதிவிட்டிருந்தார் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.