ஈசிஆர் சாலை மட்டுமல்ல… சென்னை டூ செங்கல்பட்டு வரை… தடாலடி ஏற்பாட்டில் பருவமழை பணிகள்!

தமிழகத்திற்கு அதிகப்படியான மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழை (North East Monsoon) தான். ஓராண்டின் மொத்த மழையில் சுமார் 70 சதவீதம் இதன்மூலம் தான் கிடைக்கிறது. இது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இதன்மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது.

திருப்பூரில் ஒத்திகை நடத்திய தீயணைப்பு துறை – பருவமழை முன்னேற்பாடு
பருவமழை முன்னெச்சரிக்கை

எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், சென்னை மெட்ரோ ஆகிய கோட்டங்களின் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத் துறை பணிகள்

குறிப்பாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார். அதன்படி, திருவான்மியூர் – அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒப்பந்ததாரர்களுக்கு காலக்கெடு

ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். இது சம்மந்தப்பட்ட பொறியாளர்களின் முக்கிய பணி. வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்லும் வகையிலான பணிகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்களின் பணிகள் அனைத்தும் வரும் 30.9.2023க்குள் முடிக்க வேண்டும். இவற்றை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஈசிஆர் சாலையில் நில எடுப்பு பணிகள்

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) நிலுவையில் உள்ள நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின் உபகரணங்களை அகற்றும் பணி, குடிநீர் குழாய்களை அகற்றும் பணி உள்ளிட்டவற்றுக்கு தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும். நில எடுப்புப் பணிகளில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலம் தொடர்பான வேலைகள்

இதையடுத்து பெரிய மேற்கத்திய சாலை, உள்வட்ட சாலை, வளசரவாக்கம் – (ராமாபுரம் வழி) வள்ளுவர் நகர் சாலை, பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி அருகில் கூடுதல் சிறுபால பணிகள், குரோம்பேட்டையில் கூடுதல் சிறுபால பணிகள், ஒட்டியம்பாக்கம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் – குடிமியாண்டி தோப்பு சாலையில் உயர்மட்ட பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.