உதயநிதி ஸ்டாலின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு… முதல் ஆளாய் உ.பி., செஞ்ச பரபரப்பு சம்பவம்!

தமிழக அமைச்சர் ஒருவர் பேசிய விஷயம் தான் தேசிய அளவில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இதனால் 2024 மக்களவை தேர்தல், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், ஒரே நாடு ஒரே தேர்தல், சி.ஏ.ஜி அறிக்கை, அதானி குழுமத்தின் மோசடி, இந்தியா கூட்டணியின் அரசியல் நகர்வு உள்ளிட்டவை ஓரங்கட்டப்பட்டு விட்டன. இத்துடன் நிற்காமல் புகார்கள், வழக்குப்பதிவு என விஷயம் சீரியசாக மாறி வருகிறது.

சனாதன ஒழிப்பு

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மலேரியா, கொசு, டெங்கு, கொரோனா ஆகியவை எதிர்க்கப்பட வேண்டியவை அல்ல. ஒழிக்கப்பட வேண்டியவை. அதுபோல தான் சனாதன தர்மமும் என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை கையிலெடுத்த பாஜக ஒட்டுமொத்த கவனத்தையும் திருப்பி விட்டுள்ளது.

உதயநிதி தலைக்கு விலை

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருந்தார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் குத்தியும், தீயிட்டு கொளுத்தியும் அதிர்ச்சியூட்டினார். 10 கோடி ரூபாய் போதவில்லை எனில் மேலும் அதிகப்படியான பணம் தர தயாராக இருப்பதாகவும் கூறி பரபரப்பை கொளுத்தி போட்டார்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு

இதே உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ராம்பூர் காவல் நிலையத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 295ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

கார்கே மகனும் சிக்கினார்

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடகா ஐடி துறை அமைச்சருமான பிரியங்க் கார்கேவும் சிக்கியிருப்பதை பார்க்க முடிகிறது. முன்னதாக இவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். எந்த ஒரு மதம் ஏற்றத் தாழ்வுகளை போதிக்கிறதோ அது மதமே அல்ல. அது ஒரு நோய் என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்நாடகாவில் பரபரப்பு

இதனால் சனாதனத்திற்கு எதிராக பேசிவிட்டார் என்று பிரியங்க் கார்கே மீது பாஜகவினர் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக கர்நாடகாவில் பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது. இதனால் கார்கேவிற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் உத்தரப் பிரதேசத்தில் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.