டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஜி20 மாநாட்டை முன்னிட்டு அரசு அதிரடி!

ஜி 20 உச்சி மாநாடு

ஜி 20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்தியா முதல் முறையாக ஜி20 உச்சி மாநாட்டை தலைமை ஏற்று நடத்துகிறது.

யார் அந்த கோமாளி? பாரத் பெயர் மாற்றம்.. வைரலாகும் பிரகாஷ் ராஜின் டிவீட்!
தீவிர கண்காணிப்பு

இதனை முன்னிட்டு தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய விமானப் படை விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு பல பகுதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு விடுமுறை

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தம்பியை கொன்று புதைத்து.. மாங்கன்று நட்ட அண்ணன்.. ஆடிப்போன கேரளா!
டெல்லிஅரசு விடுமுறை

இதுகுறித்து டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள புராதண சின்னங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தின் முன்பு 27 அடி உயரத்தில் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.