ஜெய்ப்பூர்: வேளாண் விளைபொருட்களை கொண்டு எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகிலுள்ள கோகமெடி பகுதியில் பாஜகவின் 4-வது பரிவர்த்தன் யாத்திரையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் உங்களுக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். கோதுமை, அரிசி, சோளம் மற்றும் கம்பு பயிரிடுவதன் மூலம் உங்கள் (விவசாயிகள்) வாழ்க்கையை மாற்ற முடியாது. எவ்வளவு உற்பத்தி செய்தாலும் விலை அப்படியேதான் இருக்கும்.