மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த ஜெயிலர் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பு தரப்பு கார் பரிசாக அளித்தது. மேலும், படத்தில் பணியாற்றிவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இந்த சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகையில், 'ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினியை இன்று சந்தித்தேன். களத்திலும், திரையுலகிலும் ரஜினிகாந்த் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.