சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வெவ்வேறு நாட்களில் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இன்று மாலை இந்த 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/chennai-hc-e1683339646927.jpg)