சண்டிகர்: ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் கடந்த செப்.,20ம் தேதி இரவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல், ஒரு வீட்டிற்குள் புகுந்தது. வீட்டினுள் இருந்தவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.
கையிற்றால் அவர்களை கட்டிவைத்ததுடன், குடும்பத்தினரின் முன்பாகவே 3 பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை திருடி விட்டு தப்பிசென்றனர். குடும்பத்தினர் முன்பாக 3 பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து, திருட்டில் ஈடுபட்ட கொடூரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement