இலங்கை அரச சேவை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ள, 2023ஆம் ஆண்டுக்கான அரச சேவை கடின பந்து கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரச சேவை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் கமல் புஷ;பகுமார தெரிவித்தார்.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று (21) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச சேவை கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டியானது செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் முடிவடையவுள்ளது.
அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 80 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இந்த வருடத்திற்கான சுற்றுப்போட்டி, யு முதல் ர் வரையான பல குழுக்களின் கீழ் நடைபெறவுள்ளது. குழு யு இற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அனுசரனை வழங்கப்பட உள்ளது.