சென்னை: ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றுள்ள ப்ரித்விராஜ் தொண்டைமான், ராம்குமார், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் ட்ராப்) பிரிவில் தங்க பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ள நம் தமிழகத்தைச் சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமானுக்கு எனது பாராட்டுகள். மேலும், ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன்,
ஸ்குவாஷ் விளையாட்டில் மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.