கதை நாயகனாக சின்னி ஜெயந்த்

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நாடக நடிகர் என இருந்த சின்னி ஜெயந்த், 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பன், அண்ணன், காமெடியன், குணசித்ரம் என ஏராளமான படங்களில் நடித்தார். உனக்காக மட்டும், கானல் நீர், நீயே என் காதலி படங்களை இயக்கினார். இதில் கானல் நீர் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா இந்த படத்தை இயக்குகிறார். மூன்றரை வயது குழந்தையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் டிரைவராக சின்னி ஜெயந்த் நடிக்கிறார். அவரது நண்பன் கதாபாத்திரத்தில் வையாபுரி நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது ஒரு டாக்ஸி டிரைவருக்கும், அவருக்கு கிடைத்த ஒரு 3 வயது குழந்தைக்குமான அன்பை சொல்லும் படமாக உருவாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.