மும்பை: 7 மாடிக் கட்டடத்தில் அதிகாலையில் ஏற்பட்ட `தீ' விபத்து; 6 பேர் பலி, 40 பேர் காயம்!

மும்பை கோரேகாவ் பகுதியில் ஃபிலிம் சிட்டி இருக்கிறது. அதோடு ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கோரேகாவ் பகுதியில் வசிக்கின்றனர். மேலும் கோரேகாவில் சிறுத்தைகள் வாழக்கூடிய வனப்பகுதியும் இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணிக்கு கோரேகாவ் மேற்கு பகுதியில் இருக்கும் எம்.ஜி ரோட்டிலுள்ள பவானி என்ற ஏழு மாடிக் கட்டடத்தில், திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும், மும்பை முழுவதுமிருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. உறங்கிக்கொண்டிருந்த மக்கள் தூக்கத்திலிருந்து எழுந்து எப்படி தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்வது என்று தெரியாமல், உதவி கேட்டு கூச்சலிட்டனர்.

தீ விபத்து

பொதுமக்கள் 7 மாடிகளிலும் சிக்கிக்கொண்டு காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அவர்கள் பால்கனியில் நின்றபடி உதவி கேட்டு, கத்தினர். தீயணைப்புத்துறையினர் ஒருபுறம் தீயை அணைத்தனர். மற்றொருபுறம் கட்டடங்களில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். ஆனாலும், தீ விபத்தில் சிக்கியும், புகை மண்டலத்தில் மூச்சுமுட்டியும் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பெண்கள் உட்பட 40 பேர் இந்தத் தீ விபத்தில் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் கூப்பர், எஃப்.பி.டி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தரை தளத்தில் கடைகளும், வாகனங்களும் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தன. தரை தளத்தில் இருந்த கடையில் ஏற்பட்ட தீ, மேல் மாடிகளுக்குப் பரவியது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.