`மலைப் பாம்பு எண்ணெய்… எனது அனுபவத்தில் இதுதான் முதல் வழக்கு!’ – வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(75). இவர் மலைப்பாம்பு ஒன்றை கொன்று பாத்திரத்தில் வைத்து எண்ணெய் காய்ச்சுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் வேளிமலை வனச்சரக அலுவலர், வேளிமலை வடக்குபிரிவு வனவர், வேளிமலை தெற்கு வனக்காப்பாளர்  மற்றும் வேட்டைத்தடுப்புக்காவலர் அடங்கிய குழுவினர் பாலசுப்ரமணியன் வீட்டில் சோதனை செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா

அங்கு மாலைப்பாம்பை கொன்று அதிலிருந்து காய்ச்சப்பட்ட எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெயை கைப்பற்றிய வனத்துறையினர் பாலசுப்ரமணியன் மீது வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்யது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவருக்கு பக்கவாதம் இருப்பதாகவும், அதற்காக மலைப்பாம்பின் கொழுப்பை பயன்படுத்தி எண்ணெய் தயாரித்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் இளையராஜா கூறுகையில், “வனத்துறையில் கிராம வனக்குழுக்கள் அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பாலசுப்ரமணியன் முன்பு கிராம வனக்குழுவில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். வயதான பிறகு அவர் அந்த குழுவில் செயல்படுவதில்லை. இந்த நிலையில்தான் ஒரு வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பை சிலர் பிடித்து பாலசுப்ரமணியிடம் கொடுத்து, வனத்துறையில் ஒப்படைக்கும்படி கூறியிருக்கிறார்கள். அவர் அந்த பாம்பை கொன்று எண்ணெய் எடுத்திருக்கிறார். எல்லா பாம்புகளிலுமே கொழுப்பு இருக்கும். மலைப்பாம்பு பெரிய உருவம் கொண்டதால் அதில் சற்று அதிகமாக கொழுப்பு இருக்கும் அந்த கொழுப்பை எடுத்து அவர் உருக்கியிருக்கிறார். அவருக்கு பக்கவாதம் போன்ற உடல் பிரச்னை இருந்திருக்கிறது. பாம்பு எண்ணெய் பக்கவாதத்தை குணப்படுத்தும் என்ற தவறான எண்ணத்தின் காரணமாக அப்படி செய்திருக்கிறார்.

மலைப்பாம்பு!

எனது அனுபவத்தில் பாம்பில் இருந்து எண்ணெய் எடுப்பது இதுதான் முதல் வழக்கு. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினோம். அவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில்கொண்டு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. அவர், விசாரணைக்கு தவறாமல் ஆஜராகவேண்டும் என கோர்ட் அறிவுறுத்தி உள்ளது” என்றார். மண்ணுளிப்பாம்புக்கு அதிக விலை இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரப்பப்பட்டு இருக்கிறது. ஆனால், மலைப்பாம்பு எண்ணெய்க்கு மார்க்கெட் இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர் வனத்துறையினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.