கொப்பால் : விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது குத்தாட்டம் போட்ட வாலிபர் சுருண்டு விழுந்து இறந்தார்.
கொப்பால் கங்காவதி பிரசாந்த் நகரில் வசித்தவர் சுதீப் சஜ்ஜன், 30. தனியார் நிறுவன ஊழியர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பிரசாந்த் நகரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த சிலையை கரைக்க, பிரசாந்த் நகர் வாலிபர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
அப்போது ஒலிப்பெருக்கியில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. சுதீப்பும், அவரது நண்பர்களும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். அப்போது திடீரென சுதீப் சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement