திருவள்ளூர் | போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை. இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.

சோழவரம் – புதூர் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணனை போலீஸார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். கொலை வழக்கில் முத்து சரவணனை பிடிக்க காவல் துறையினர் முயற்சித்துள்ளனர். அப்போது காவலர்களை அவர் தாக்கியதாக தகவல். தொடர்ந்து தற்காப்பு ரீதியாக போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் முத்து சரவணன். இவர் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை – ஊரப்பாக்கம் அருகே இரண்டு ரவுடிகளை போலீஸார் என்கவுன்ட்டர் செய்திருந்தனர். நேற்று இரவு காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தணிகாவை போலீஸார் மாமண்டூர் அருகே சுட்டுப் பிடித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.