ரசிகர்களுக்கு ஷாக்! நிருபராக மாறிய சூர்யகுமார் யாதவ்

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை.

இதில் நாளை நடைபெற உள்ள 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இதற்காக இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்று காலை ரசிகர்களை வித்தியாசமான முறையில் சந்தித்தார்.

கையில் கேமராவுடன், முகத்தில் மாஸ்க் அணிந்த படி மும்பை வீதியில் வலம் வந்த அவர், ரசிகர்களிடம் தன்னை நிருபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு இந்திய அணி குறித்து பேட்டி எடுத்தார். அப்போது ரசிகர்கள் தங்கள் பதில்களை அளிக்க, சிறிது நேரம் கழித்து மாஸ்க்கை அகற்றிவிட்டு ரசிகர்கள் முன் நின்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

இதனையடுத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதேபோன்று, சக வீரரான ரவீந்திர ஜடேஜாவையும் நிருபரைபோல் சென்று சந்தித்து சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியளித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.