கிராம சேவை உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களை நிரப்புதற்கான பரீட்சை டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான பரீட்சைகள் எப்போது நடை பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
2023.06.30ம் திகதி வரை நாட்டில் 2763 கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், 2021.03.31 ம் திகதியளவில் கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடைபெறவிருந்த பரீட்சையை, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் ஊடாக நடாத்துவதற்கும், தற்போது அரச சேவையிலுள்ள அலுவலர்களை உள்வாங்குவதற்கும், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக, 2023 டிசம்பர் மாதத்தில் பரீட்சைகளை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்