9 Killed In US Strikes On Iran-Linked Site In Syria: Report | சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 9 பேர் பலி

வாஷிங்டன்: சிரியாவில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர் என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்டநாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்காவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் தங்கியிருந்த இடத்தில் இரண்டு அமெரிக்க எப்-15 போர் விமானங்கள் மூலம் சிரியாவில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர் என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து இதுவரை அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட முறை சிரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.