Heroin worth Rs 1 crore seized | ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

பாலக்காடு:பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த பார்சலில் இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். -கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்திய சோதனையின் போது, இருக்கைக்கு கீழே இரண்டு பார்சல்கள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றை எடுத்து சோதனை செய்த போது, 140 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரிந்தது.

பறிமுதல் செய்த ஹெராயினுக்கு, சர்வதேச சந்தையில், 1 கோடி ரூபாய் விலை உள்ளது. இதை கடத்திய கும்பலை பிடிக்க, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.