டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்தியஅரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது என்றும் கூறியுள்ளது. பல்வேறு மசோதாக்களுக்கு காலதாமதம் செய்த ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை நாடுவதாக தெரிவித்து உள்ளது. மேலும், தமிழக […]