இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று மாலை 5 மணிக்கு சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி இவர் காணிக்கையாக வழங்கியதாகும். ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று ஐயப்பனுக்கு செய்யப்படும் விசேஷ பூஜை சித்திரை ஆட்டத் திருநாள் ஆகும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.