பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது

 

• இலங்கை பலசரக்குகள் சங்கத்தின் 19 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.

பண்டைய காலங்களில் நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த பலசரக்குகள் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு விரிவான வேலைத்திட்டம் தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதற்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு இலங்கை பலசரக்குகள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், தனியார் துறைகளை ஒன்றிணைத்து இந்த வேலைத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு ஜெயிக் ஹில்டன் ஹோட்டலில் (08) பிற்பகல் நடைபெற்ற இலங்கை பலசரக்குகள் சங்கத்தின் 19 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கறுவா தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக வழங்கிய பங்களிப்பிற்காக சாரத டி சில்வா மற்றும் பேராசிரியர் ஜெயசிறி லங்காகே ஆகியோருக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி வைத்தார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

உலகிலேயே சிறந்த பலசரக்குகள் பொருட்கள் நம் நாட்டில்தான் இருந்தன. ஆனால், கடந்த 30, 40 ஆண்டுகளாக, பலசரக்குகள் துறையின் பின்னடைவால், மசாலா மூலம் நமக்கு வரும் வருமானம் குறைந்துள்ளது.

ஆனால் இப்போது அது மாற வேண்டும். பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மையுடன், நாம் ஒரு போட்டி பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற வேண்டும். கடனை அடைக்க அதிக அன்னியச் செலாவணியை ஈட்ட வேண்டும். மற்றும் எமது கையிறுப்பில் சாதகமான நிலை இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.

எனவே பொருளாதார நடவடிக்கைகளில் அந்நியச் செலாவணியைக் கொண்டுவரும் போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதன் முக்கிய துறைகளில் ஒன்றாக பலசரக்குகள் பொருள்களை அடையாளம் காணலாம்.

பண்டைய காலத்தில், இந்த நாட்டின் பொருளாதாரம் முக்கியமாக பலசரக்குகள் துறையைச் சார்ந்தது. நாம் பரந்த சந்தையில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அரசாங்கம் ஏற்கனவே தலையிட்டுள்ளது. கறுவா அபிவிருத்திக்கென தனியான திணைக்களம் அமைத்துள்ளோம்.

மேலும், மிளகு என்பது பண்டைய காலத்திலிருந்தே தோட்டத்தில் பயிரிடப்படும் பயிர். இதுபோன்ற இன்னும் பல பலசரக்குகள் பொருட்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்த இலக்கு மையப்பட்டத் திட்டம் மூலம் செயல்பட வேண்டும்.
மேலும், நம் நாடு மிக உயர்ந்த தரமான மற்றும் சுவையான கோபியை உற்பத்தி செய்கிறது. மேலும், நம் நாட்டில் கிடைக்கும் கொகோ கொகோவின் சிறந்த வகைகளில் ஒன்றாகும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிர்களுக்குத் தேவையான நிலத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. மேலும் தனியார் நிலங்கள் அதிகமாக உள்ளன. இந்தத் துறையை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

மேலும், புதிய தொழில்நுட்பத்துடன் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும். இங்கு தனியார் துறையினரின் ஆதரவும் தேவை. பலசரக்குகள் துறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மசாலா சங்கத்தில் உள்ள அனைவரும் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கு தேவையான ஆதரவை வழங்க நானும் அமைச்சரும் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,

ஒரு அரசாங்கம் என்ற வகையில், பலசரக்குகள் துறையை மேம்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். கறுவா பெறுமதியை மேம்படுத்தும் வகையில் கறுவாவிற்கான தனியான திணைக்களமொன்றை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை மிகவும் காலத்துக்குரியது என்றே கூற வேண்டும்.

பலசரக்குகள் தொழில் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதியின் தலைமையில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்.

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானக லிந்தர, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிங்ஸ்லி பெர்னார்ட், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கை பலசரக்குகள் சங்கத்தின் தலைவர் விராஜ் டி சில்வா மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.