கோரக்பூர்:உத்தர பிரதேசத்தில் பஸ் மீது லாரி மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உ.பி., மாநிலம் கோரக்பூரில் இருந்து குஷிநகர் பத்ரவுனா நகருக்கு நேற்று முன் தினம் ஒரு பஸ் சென்றது.
கோரக்பூர்- – குஷி நகர் நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு சென்றபோது பஸ் டயர் வெடித்தது. டிரைவர் சாமர்த்தியமாக இயக்கில் சாலையோரத்தில் பஸ்சை நிறுத்தினார். மாற்று பஸ் வருவதற்காக காத்திருந்தனர். அப்போது, சில பயணியர் கீழே இறங்கினர். பலர் பஸ்சுக்குள்ளேயே உட்கார்ந்து இருந்தனர்.
அப்போது, எதிரில் அசுர வேகத்தில் வந்த ஒரு லாரி, பஸ் மீது மோதியது. அதே இடத்தில் இரு பயணியர் உயிரிழந்தனர். காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 29 பேரில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உயிரிழந்ததில் குஷி நகரைச் சேர்ந்த சைலேஷ் படேல்,25, சுரேஷ் சவுகான்,35, நிதேஷ் சிங்,25 மற்றும் ஹிமான்ஷு யாதவ்,24 ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement