தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று காலையில் மகாராஷ்டிராவில் அதிரடியாக ரெய்டு நடத்தியது. மும்பை, தானே, புனே, மீரா பயந்தர் உட்பட மொத்தம் 40 இடங்களில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இந்த ரெய்டில் ஈடுபட்டனர். சமீபத்தில் புனேயில் தீவிரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அதிகமானோர் மும்பை அருகில் உள்ள தானேயில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வெடிகுண்டு தயாரிக்க புனேயில் பயிற்சி எடுத்துக்கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதோடு அடிக்கடி இந்தியா முழுக்க தாக்குதல் நடத்துவது தொடர்பாக கூட்டு சதியிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அவர்கள் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தற்போது மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத சதி தொடர்பாக மகாராஷ்டிராவில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தானே ரூரல் பகுதியில் 31 இடத்திலும், தானே நகரத்தில் 9 இடத்திலும், புனேயில் இரண்டு இடத்திலும், மிரா பயந்தரில் ஒரு இடத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. முன்னதாக திருட்டு வழக்கு ஒன்றில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவ்வழக்கு மகாராஷ்டிராவில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது.
அதனை தொடர்ந்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ரெய்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மட்டுமல்லாது கர்நாடகாவின் சில பகுதியிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. மத பள்ளிகளும் ரெய்டில் சிக்கியது. வாலிபர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்க்க முயற்சி செய்யப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்தும் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.