பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்

தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகை லீலாவதி. சுமார் 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் அவள் ஒரு தொடர்கதை, பட்டினத்தார், நான் அவனில்லை, வளர்பிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

85 வயதான லீலாவதி தன்னுடைய மகன் வினோத் ராஜுடன், பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லீலாவதி மரணத்திற்கு கன்னட திரை உலகினர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.