Attack on farmers in Mexico kills 11 | விவசாயிகள் மீது தாக்குதல் மெக்சிகோவில் 11 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கொள்ளை கும்பலுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் டெக்ஸ்காட்டிட்லான் என்ற பகுதி யில் வசிக்கும் மக்கள், விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அந்த பகுதிக்குள் தானியங்கி துப்பாக்கிகளுடன் நுழைந்த கொள்ளை கும்பல், மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள் மீது, அக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி தரும் வகையில் விவசாயிகளும், அந்த கும்பல் மீது அரிவாள் போன்ற ஆயுதங்களின் உதவியுடன் தாக்குதல் நடத்தினர். இதில், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டுப் பேரும், விவசாயிகள் மூன்று பேரும் என மொத்தம், 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தாக்குதல் நடத்தியவர்கள், போதைப்பொருள் கடத்தும் கும்பலாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.