Worlds largest mall building in Gujarat: Modi to inaugurate on 17 | குஜராத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மைய கட்டடம்: 17-ல் மோடி திறக்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் உலகின் பெரிய வர்த்தக மைய கட்டடத்தினை வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத்தில் 35. 54 ஏக்கர் பரப்பளவில் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக வைர வர்த்தக மையம் 15 மாடிகளுடன் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இக்கட்டடம் கட்டும் பணிகள் துவங்கியதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையக அலுவலகமான ‛ பென்டகன்’ கட்டடம் தான் உலகிலேயே மிகப்பெரிய கட்டிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் கட்டப்பட்டுள்ள வர்த்தக மைய கட்டடம் உலகின் மிகப்பெரிய கட்டடம் என்ற பெருமை பெற்றுள்ளது. இக்கட்டடத்தை வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.