வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : 2022-ம் ஆண்டில் பெண்கள் மீது நடந்த ஆசிட் தாக்குதலில் பெங்களூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
2022-ம் ஆண்டில் பெண்கள் மீது நடத்தப்பட்ட ஆசிட் தாக்குதல் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் 19 மெட்ரோ நகரங்களில் ஆய்வை மேற்கொண்டது. இதில் பெங்களூரு நகரத்தில் மட்டும் எட்டு பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. ஏழு பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தலைநகர் புதுடில்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஐந்து பெண்களுடன் அகமதாபாத் நகரம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
அதே நேரத்தில் பெண்கள் மீதான தாக்குதல் முயற்சி வழக்கில் டில்லியில் ஏழு வழக்குகளும் பெங்களூருவில் மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் நகரங்களில் இது குறித்த வழக்குகள் இரண்டு பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement