Gambling gang jailed female police officer | பெண் போலீசாரை சிறை வைத்த சூதாட்ட கும்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாலசோர், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தலசாரி கடற்கரை போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டராக சம்பாபதி சோரன் என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவர், மற்ற கான்ஸ்டபிள்களுடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றார்.

அப்போது, உதய்பூர் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் அங்கு ரெய்டு சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த சிலர், கும்பலாக சூழ்ந்து அவர்களை சுற்றி வளைத்தனர்.

மேலும், பெண் இன்ஸ்பெக்டர் சம்பாபதி சோரன் மற்றும் அவருடன் சென்ற மூன்று பெண் கான்ஸ்டபிள்களையும் அங்குள்ள ஓர் அறையில் அடைத்து வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸ் படையினர் சிறைப்பிடிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.