100 பேர் முன்னால் நடிப்பது எளிதல்ல : கவுதம் மேனன்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜோஷ்வா – இமை போல காக்க' திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கவுதம் மேனன் பேசியதாவது: நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரிக்கு நன்றி. வருண் குழந்தை மாதிரி. நானும் சினிமாவில் நடிப்பதால் சொல்கிறேன், கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண். படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார். கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியதாவது : 'சிங்கப்பூர் சலூன்' வெற்றியைத் தொடர்ந்து , மார்ச் 1 அன்று 'ஜோஷ்வா இமை போல காக்க' படம் வெளியாகிறது. இதுவும் எங்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி என்று கவுதம் சொன்னார். நான் உடனே சம்மதம் சொன்னேன்.

என்னுடைய சகோதரி மகன் தான் வருண். நான் தயாரிக்கும் படங்களில் எல்லாம் கேமியோ ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு கவுதமின் லவ் படங்கள் பிடிக்கும். அவரிடம் வருணை அறிமுகப்படுத்தினேன். வருண் சாக்லேட் பாய் போல உள்ளான் எனக் கூறி அவரை வைத்து சூப்பர் லவ் ஸ்டோரி செய்யலாம் என்று கவுதம் உற்சாகமாக சொன்னார். பிறகு இது ஆக்ஷன் படமாக மாறியது. படத்தில் 10 சண்டைக் காட்சிகள் உள்ளது. படம் முழுக்க ஆக்ஷன் தான். ஹாலிவுட் படம் போல ஆக்ஷன் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அதற்கு கதிரின் ஒளிப்பதிவும், கார்த்திக்கின் இசையும் பெரும் பலம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக உழைத்துள்ளனர். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.