3 women judges in one house | ஒரே வீட்டில் 3 பெண் நீதிபதிகள்

உத்தரகன்னடா : உத்தரகன்னடா மாவட்டத்தில், முதன் முறையாக, ஒரே வீட்டில் மூன்று பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக உயர்நீதிமன்றம், 33 சிவில் நீதிபதிகள் பட்டியலை வெளியிட்டது. இதில் உத்தரகன்னடா, சிர்சியின் ஸ்ரேயாவும் ஒருவர். இவரது தந்தை நாயக், ஓய்வு பெற்ற உதவி வன பாதுகாப்பு அதிகாரி. தாய் ரூபா நாயக், மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஸ்ரேயாவின் சகோதரி ஷில்பா, 2019ம் ஆண்டு பேட்ச்சில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது மங்களூரில் பணியாற்றுகிறார். உத்தரகன்னடா மாவட்டத்தில், முதன் முறையாக ஒரே வீட்டில் மூன்று பெண்கள் நீதிபதிகளாகி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.