'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி,

புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு ‘கியூட்’ என்னும் பல்கலைக்கழகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை பட்டப்படிப்புக்கான கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது.

இந்தநிலையில் கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நுழைவுத்தேர்வு மே மாதம் 15-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.