மேட்டூர்: மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள், பெயர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தருமபுரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் 2,71,875 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. முதல் முறை வாக்காளர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை முதல் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், மேட்டூர் தொகுதியில் பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க அடையாள அட்டையுடன் சென்ற மக்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.