உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திரசிங். இவர் கோவை துடியலூர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் தன் ஊழியர்கள் மோகன்குமார் ஷர்மா, மசூத் அகமது, முகமது கலீல், சுமன்குமார் முன்னா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் தன் எஸ்.யூ.வி காரில் கோத்தகரி – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வியூ பாயின்ட்டுக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி, தன் நண்பர்கள் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகியோருடன் அதே இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் அறிமுகமாகியுள்ளனர். ஒருவருக்கொருவர் கைக்குலுக்கும்போது, இந்திர சிங் பாண்டியின் கையை சற்று வலுவான குலுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. வலியால் துடித்த பாண்டி இந்திரசிங்கை திட்டியுள்ளார். இதுகுறித்து இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் பாண்டி மற்றும் நண்பர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை பாண்டி ஓட்டியுள்ளார். அவர்கள் ஸ்கூட்டர் முனியப்பன் சாலை அருகே செல்லும்போது, அங்கு எஸ்யூவி காரும் சென்றுள்ளது.
இந்திரசிங் காரை ஓட்டியுள்ளார். நொடிப்பொழுதில் அந்தக் கார், பாண்டி ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் பாண்டி உள்ளிட்ட நண்பர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனிடையே ரிவர்ஸ் கியரில் வேகமாக சென்று பாண்டியின் மீது காரை ஏற்றியுள்ளார். இதில் பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
அவரின் நண்பர்கள் அருண்குமார் மற்றும் வசந்தகுமார் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் இந்திரசிங் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs