Kuldeep Yadav: “தோனியைப் போன்ற வழிகாட்டி தேவைப்பட்டார்!" – குல்தீப் யாதவ் உருக்கம்

ஐ.பி.எல் இல் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வரும் குல்தீப் யாதவ் முன்னர் கே.கே.ஆர் அணியிலிருந்தது குறித்தும் அங்கே ஆடியபோது அவர் எவ்வளவு பலவீனமாக இருந்தார் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

குல்தீப் யாதவ் நடப்பு சீசனில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். 5 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டெல்லி அணிக்காக நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கும் பௌலர் அவர்தான். இந்நிலையில், கொல்கத்தா அணிக்காக ஆடியபோது அவர் எந்த அளவுக்கு பலவீனமான வீரராக இருந்தார் என்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

குல்தீப் யாதவ்

அவர் பேசியிருப்பதாவது, ‘இந்திய அணியில் இருக்கும்போது மஹி பாய் ( தோனி) எனக்கு வழிகாட்டியாக இருந்தார். 2019 -ல் அவர் ஓய்வுப் பெற்ற பிறகு எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. குறிப்பாக ஐ.பி.எல் இல் கேகேஆர் அணியில் நான் இருந்தபோது எனக்கு நிறைய வழிகாட்டுதல்கள் தேவைப்பட்டது. ஆனால் இப்போது எனக்கு அது தேவையில்லை. கிரிக்கெட்டில் நான் 2016 முதல் 2020 வரை இருந்த நாட்களை எண்ணி வருந்துகிறேன்.

இப்போது எனக்கு இருக்கும் அனுபவங்களும், பக்குவங்களும் அப்போது இருந்திருந்தால் கிரிக்கெட்டில் இன்னும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும். அந்த நாட்களை வீணடித்தது குறித்து இன்னும் வருந்துகிறேன்.

குல்தீப் யாதவ்

ஆனால் நிறைய விளையாடினால் மட்டுமே அனுபவம் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் தோல்வியைச் சந்திக்கும்போது மட்டுமே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.