சமீபகாலமாக பிரபலமாகவேண்டும் என்ற நோக்கத்தோடு, முகம் சுளிக்கும் பொதுமக்கள், பாதிக்கப்படும் பயணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள், மீறப்படும் சட்டம் ஒழுங்கு போன்ற எதைப் பற்றியும் கவலையில்லாமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வித்தியாசமாக ஏதோ ஒன்றை செய்து வருகின்றனர். சில விஷயங்களுக்கு தக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியின் துவாரகாவில், பைக்கில் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் வேடமிட்டு ஸ்டண்ட் செய்த வீடியோ ஒன்று 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலாகியது. மேலும், அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை இருவரையும் கைதுசெய்திருக்கிறது.
இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவு செய்து ஆன்லைனில் பகிர்வதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் (எம்வி) பல பிரிவுகளை மீறி வாகனம் ஓட்டப்பட்டிருக்கிறது. இந்த தகவல் எங்கள் கவனத்துக்கு வந்ததும், அது தொடர்பாக விசாரிக்கத் தொடங்கினோம். அதில், டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா (20) அவரது தோழி அஞ்சலி (19) ஆகியோர் பைக்கை ஓட்டியது தெரியவந்தது.
#WATCH : Spiderman went for a Bike Ride with , Spiderwoman. Cops Arrested Them
A man and woman dressed as superheroes, Spiderman and Spider-Woman, were arrested for performing stunts on a motorcycle in South West Delhi’s Dwarka.
After the video went viral, the Delhi traffic… pic.twitter.com/8Wg6ZnVSYR
— upuknews (@upuknews1) April 26, 2024
அதைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்கள் உள்ளிட்ட எம்வி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஆதித்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் யூடியூபர்கள் என தெரியவந்திருக்கிறது. இருவரையும் விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.