சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. தான் அனாதை இல்லை என்றும் தன்னுடைய மகன்கள் தனக்கு ஒன்று என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள் என்றும் பாண்டியன் கோமதியிடம் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கியபடி பேசுகிறார். இதைக் கேட்டு கோமதியும் கண்கலங்குகிறார்.
