ஸ்டாலினின் முத்திரைக் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

இன்று அன்னையர் தினம் என்பதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ‘’அம்மா’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது’ என்று வாழ்த்து வழங்கியிருக்கிறார்.

அதோடு, முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில், ‘மூன்றாண்டு சோதனை ஆட்சியின் பரிசாக தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் விடியா அரசுக்கு கடும் கண்டனம்’ தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.