தென் மாகாணப் பாடசாலைகளுக்காக சிங்கள மற்றும் ஆரம்ப பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம்…

தென் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாற்குறைகளை நிவர்த்திப்பதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் முதற் கட்டத்தின் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு தென் மாகாண ஆளுநர் தலைமையில் வெலிகம நகர சபை வளாகத்தில் (10) இடம்பெற்றது.

இதன்போது தென் மாகாண பட்டதாரி ஆசிரியர் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்த 8400 பட்டதாரிகளில் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்ட 3230 பேரில் சிங்கள மற்றும் ஆரம்ப வகுப்புப் பாடங்களுக்காக 870 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

ஏனைய பாடவிதானங்களுக்காக எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.