க.பொ.த சாதாரண தரப்பரீட்சை விஞ்ஞான பாட வினாப்பத்திரத்திற்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்

இம்முறை இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப்பாட வினாப்பத்திரத்தில் ஏற்பட்ட தவறுக்காக அனைத்து மாணவர்களுக்கும் 2 புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சநந்திப்பின்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விஞ்ஞானப் பாடத்தின் பல்தேர்வு வினாப்பத்திரத்தின் 9வது மற்றும் 39வது வினாக்களுக்காகவே இந்த இரண்டு புள்ளிகள் சேர்க்கப்படும் என்றும், குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் பாடத்திட்டத்திற்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாக கமூக ஊடகங்களில் பிரச்சராஙகள் பரவியதையடுத்து அது சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டினக்காட்டினார்.

அத்துடன், கடந்த 6ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று (15) நிறைவடைந்துள்ளதாகவும், வினாத்தாள்கள் செல்லுபடியற்றதாக்கப்படாமல் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சில சமயங்களில் சில பரீட்சை விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாகவும், பரீட்சை விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆங்கிலப்பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் வினாத்தாள் எந்த வகையிலும் வெளியிடப்படவில்லை என்பதுடன், பரீட்சை இடம்பெறும் போது இடம்பெற்ற சில முறைகேடுகள் குறித்து சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.