`டாக்டராக விரும்பினார்…' – 10ம் வகுப்பில் 99% மதிப்பெண் பெற்ற சிறுமி மூளை பாதிப்பால் உயிரிழப்பு!

குஜராத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற 16 வயது சிறுமி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, மே 11-ம் தேதியன்று குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (ஜிஎஸ்இபி) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

சிறுமி உயிரிழப்பு

அதில், மோர்பி பகுதியைச் சேர்ந்த ஹீர் கெதியா என்ற 16 வயது சிறுமி, 10-ம் வகுப்புத் தேர்வில் 99.70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார். இவருக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக ராஜ்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் வீடு திரும்பிய சிறுமிக்கு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மூச்சுத்திணறல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்தன.

அதனால், மீண்டும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், MRI ஸ்கேன் அறிக்கை மூலம், சிறுமியின் மூளை 80 முதல் 90 சதவிகிதம் வேலை செய்வதை நிறுத்திவிட்டது தெரியவந்தது. இந்த நிலையில், சிறுமியின் இதயத்தின் செயல்பாடு நேற்று நின்றுவிடவே அவர் உயிரிழந்தார்.

மருத்துவம்

அதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளின் கண்களையும் உடலையும் தானம் செய்தனர். இது குறித்து பேசிய சிறுமியின் தந்தை, `அவர் டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். இப்போது அவர் டாக்டராக முடியாவிட்டாலும் பிற உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரின் உடலைத் தானம் செய்தோம்’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.