உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி சபாநாயகருடன் சந்திப்பு

உகண்டா நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் அண்மையில் சபாநாயகர் மஹிந்தையா  அபிவர்த்தனவே பாராளுமன்றத்தில் வைத்து சந்தித்தனர்.

உகண்டா கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சி முகாம் நடாத்துதல்உட்பட இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளுதல் போன்ற வசதிகளை திட்டமிடல் தொடர்பாக  சபாநாயகர் உடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

2024 ஜனவரி 3  முதல் 6 ஆம் திகதி வேலையை உகண்டாவில் இடம் பெற்ற  பொதுநல வாய அமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் சபை முதல்வர்களின் 27 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கோரிக்கைக்கு இணங்க உகண்டா நாட்டின் தேசிய அணிக்கு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.