இன்று தேசிய துக்க தினமாகப் பிரகடனம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி யின் திடீர் மரணத்தை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் சகல நிறுவனங்களிலும் தேசியக் கொடியை இன்று (21)அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன மேலும் தெரிவித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. . 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.