சிலுசிலு சாரல் காத்து… பரவலாக பெய்துவரும் மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சாந்தோம், மயிலாப்பூர், அடையாறு, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அதேபோல் அம்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக கோடை வெயிலில் தவித்து வந்த சென்னை மக்களை இந்த சாரல் மழை குளிர்வித்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.