பூரி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா பூரி ஜெகந்நாதர் குறித்து தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விர்ஹம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். நேற்று ஒடிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா, செய்தியாளர்களிடம், “பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்” என்று கூறினார். ஆனால் அவர் “மோடி பூரி ஜென்நாதரின் பக்தர்” என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. ஆயினும் அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். […]