Sasikumar: "இந்தக் கதையை பண்ணமாட்டேன்; டைரக்ஷன் பக்கமாக போயிடுவேன்னு நினைச்சாங்க; ஆனா…"- சசிகுமார்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கருடன்’ படத்தில் நடித்திருக்கிறார் சூரி.

படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சசிகுமார், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, வடிவுக்கரசி, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார். “நான் இந்தப் படதுக்குள்ள கடைசியாகதான் வந்தேன். துரை செந்தில்குமார் இந்தக் கதையைச் சொன்னாரு. சொன்னதும் கதை புடிச்சிருக்கான்னு கேட்கல. உடனே தயாரிப்பாளர் தட்டுல எல்லாம் வச்சு எடுத்துட்டு வந்துட்டாரு.

சசிகுமார், சமுத்திரக்கனி

நான் அந்த சமயத்துல இந்தக் கதையை பண்ணமாட்டேன். டைரக்ஷன் பக்கமாக போயிடுவேன்னு நினைச்சாங்க. ஆனா, நான் அப்போவே கதை நல்லா இருந்தாலும் இல்லைனாலும் சூரிக்காக இந்தப் படத்தை பண்ணனும்னு நினைச்சேன். சூரியை மிகப்பெரிய நடிகனாக இயக்குநர் வெற்றிமாறன் சார் மாத்தி வச்சிருக்காரு. இந்தத் திரைப்படம் நல்லா வந்துருக்கு” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.