சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற அன்றே கோயில் தொடர்பான சில வழக்குகளை சக நீதிபதிகளுடன் அமர்ந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்தார்.

பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி ஆர். மகாதேவனுக்கு சக நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்களை பரிசாக வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.