Gujarat: கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து… 12 குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பலி!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டி.ஆர்.பி விளையாட்டு மையம் செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிந்தாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து – டி.ஆர்.பி விளையாட்டு மையம்

இந்த தீ விபத்து தொடர்பாக ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவ், “இன்று மாலை டிஆர்பி கேமிங் சென்டரில் தீ விபத்து ஏற்பட்டிருக்கரியது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ கட்டுக்குள் இருக்கிறது. உடல்களை மீட்க முயற்சி செய்து வருகிறோம். தற்போது சுமார் 20-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. தீக்காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த கேமிங் சென்டர் யுவராஜ் சிங் சோலங்கி என்ற நபருக்குச் சொந்தமானது. மீட்புப் பணிகள் முடிந்தவுடன் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தீயணைப்பு நிலைய அதிகாரி ஆர்.ஏ.ஜோபன்,“ இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து எங்களால் எதுவும் கூற முடியாது… இறந்தவர்களின் உடல்களையும், பதிக்கப்பட்டவர்களையும் மீட்டு வருகிறோம்… தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.” எனத் தெரிவித்திருக்கிறார்.

மோடி

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில்,“ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகவும் துயரமடைந்தேன். என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் இருக்கிறது. காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அரசு நிர்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்,“ராஜ்கோட்டில் கேமிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்துக்காக உடனடி மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இதயத்தைத் துன்புறுத்துகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த நிகழ்வில் எந்த வித அலட்சியமும் இல்லாமல், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.