தீவிர புயலாக வலுப்பெற்றது 'ரிமால்'

புதுடெல்லி,

வங்கக்கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள ரிமால் புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றது. 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ரிமால் புயல். தற்போது தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. தீவிரப்புயலாக வலுப்பெற்ற நிலையில் ரீமல் புயல் அதி தீவிரப்புயலாக மேலும் தீவிரமடையும்.

அதி தீவிரப்புயலாக கரையை கடக்கும் நிலையில் மணிக்கு 135 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், வங்காள தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையில் சாகர் தீவு, கேபபுரா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிமால் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.